
தற்சமயம் முல்லைத்தீவு இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 103 ரோஹிங்யா அகதிகளை சந்தித்துப் பேச இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவினருக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஈரானுக்கான தூதுவருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம். எம்.ஸுஹைர் வலியுறுத்தியுள்ளார். இந்த அகதிகளில் பெண்களும், சிறார்களும் பலர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.