
மாங்குளம் பகுதியில் ரயிலில் மோதுண்டு யுவதி ஒருவர் உயிரிழந்தார்.
இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மாங்குளம் பகுதியை சேர்ந்த யுவதியே விபத்துக்குள்ளாகி மரணமானவர் ஆவார்.
இந்த நிலையில், யுவதியின் சடலம் மாங்குளம் தொடருந்து நிலையத்திற்கு எடுத்து வரபட்டுள்ளது.





