இலங்கை போக்குவரத்து சபை ஊடாக தனியார் பேருந்துகளுக்கு டீசல்!

இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) சொந்தமான டிப்போக்களில் இருந்து தேவையான டீசலை பெற்றுக்கொள்ள தனியார் பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள 45 இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களில் தனியார் பேருந்துகளுக்கு டீசல் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த டிப்போக்களுக்கு ஏற்கனவே போதுமான டீசல் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாடு முழுவதும் உள்ள மீதமுள்ள டிப்போக்களுக்கும் அதிக எரிபொருள் வழங்கப்படும் என தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சுற்றுலாத்துறையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு போதியளவு டீசலை வழங்குவதற்கு அமைச்சு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply