
கிழக்கு மாகாணத்தில் சித்திரிக்கப்பட்டிருக்கும் தீவிரவாத குழுக்கள் என்ற செய்தி, அரசாங்கம், பொது மக்களையும் சர்வதேச சமூகத்தையும் திசை திருப்புவதற்காக செய்யும் ஒரு நடவடிக்கையாவெனத் தோன்றுகிறது. ஆதலால், அரசாங்கத்துக்கு விசாரணை செய்ய வேண்டும் என்றிருந்தால், நேரடியாக விசாரணை செய்ய வேண்டும்.அதனைவிடுத்து, தவறான செய்தியைச் சித்திரித்து ஒட்டுமொத்த சமூகத்தையும் அவமானப்படுத்த வேண்டாமெனக் கேட்டுக்கொள்வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.





