2025 ஆம் ஆண்டுக்கான இன்டோர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் இலங்கையில்!

12 ஆவது உலகக் கிண்ணப் போட்டியான 2025 ஆம் ஆண்டுக்கான இன்டோர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை நடத்துவதாக சிலோன் இன்டோர் கிரிக்கெட் சங்கம் (CICA) அறிவித்துள்ளது.

5 மாதங்களுக்கு முன்பு CICA மிகவும் வெற்றிகரமான உலக மாஸ்டர்ஸ் தொடரை நடத்திய பின்னர் சர்வதேச இன்டோர் கிரிக்கெட் கூட்டமைப்பு (WICF) போட்டியை நடத்தும் உரிமையை வழங்கியது.

இந்த போட்டிகள் பின்வரும் ஆண்கள் ஓபன், பெண்கள் ஓபன், 22 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் 22 வயதுக்கு உட்பட்ட பெண்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் நடத்தப்படும்.

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் நடத்தும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த அணிகள் போட்டியில் பங்கேற்கும்.

இந்தப் போட்டி செப்டம்பர் 27 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 05 ஆம் திகதி வரை நடைபெறும்.

இந்தப் போட்டிகள் தலவதுகொடவில் உள்ள ஆஸ்டாசியா விளையாட்டு வளாகத்திலும் புதிதாகக் கட்டப்பட்ட யு ப்ரோ அரங்கிலும் நடைபெறும்.

இந்த மதிப்புமிக்க நிகழ்விற்கு நாட்டில் சுமார் 1000 வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ஆதரவாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் ஈடுபட்டுள்ள அனைத்து முக்கிய நாடுகளிலும் குறிப்பிடத்தக்க ஊடக ஒளிபரப்பு சாத்தியமாகும்.

ஒரு பெரிய விளையாட்டு நிகழ்வாக இருப்பதைத் தவிர, தீவு நாட்டில் சுற்றுலாத் துறை வருகையில் ஒரு உயர்ந்த போக்கைக் காணும் நேரத்தில், இது ஒரு பிரபலமான விளையாட்டு சுற்றுலா வாய்ப்பாகவும் செயல்படும்.

கடந்த வருடத்தில், இலங்கையில் சர்வதேச இண்டோர் கிரிக்கெட் தொடர்பான அதிக செயல்பாடுகள் நடந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *