
அநேகமான பெற்றோர் தமது குழந்தைகளின் இணையதள பாவனை தொடர்பான கலந்துரையாடல்களின் போது கடினமாக நடந்து கொள்வது உண்டு. சிலபோது, இணையதள பாவனை தொடர்பான தமது அறியாமை காரணமாக பேச வேண்டிய விடயத்தை சுற்றி வளைத்து பேசுவதுண்டு. இதனால் சிறுவர்கள் பெற்றோருக்கு தெரியாத ஏதாவது ஒரு விடயத்தை குறிப்பிட்டு காட்டி சந்தர்ப்பங்களை சமாளித்து விடுவதுண்டு. எவ்வாறு ஆயினும் பெற்றோர் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அதேபோன்றுதான் கடினமாக நடந்து கொள்ளக் கூடாது என்பதும். பெற்றோர் கடினமாக நடந்து கொள்கின்ற பொழுது சிக்கலான சந்தர்ப்பங்களில் பிள்ளைகளுடன் தொடர்பாடல்களை ஆரோக்கியமான முறையில் பேணிக் கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகின்றன. குழந்தைகள் அதனை ஒரு சந்தர்ப்பமாகவும் பயன்படுத்துவதுண்டு.