
புத்தூர், மார்ச் 6
யாழ்.புத்துார் பகுதியில் 14 வயதான சிறுமியுடன் உடலுறவில் ஈடுபட்ட 20 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிறுமியின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த 20 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞனையும், மீட்கப்பட்ட சிறுமியையும் சட்டவைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





