யாழ் பயணிக்கும் மக்களுக்கு விரைவில் ஆரம்பமாகவுள்ள சேவை

வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணம் வரை புதிய ரயில் சேவையை ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன்படி வெள்ளிக்கிழமையில் வெள்ளவத்தையில் இருந்து இரவு 10.00 மணிக்கு யாழ்ப்பாணத்துக்கு புறப்படும்.

அத்துடன் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமையில் இரவு 10.00 புறப்பட்டு அதிகாலை 5 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்தை சென்றடையும்.

மேலும் இந்த ரயிலில் 530 பயணிகள் பயணிக்க முடியும். விரைவில் இந்த இரவு நேர ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

Leave a Reply