
எதிர்கால இலங்கையை கட்டியெழுப்புவதற்கான உகந்த செயற்திட்டம் ஐக்கிய மக்கள் சக்தியிடம் காணப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஊழல், மோசடி மற்றும் இலஞ்சம் நிறைந்த தற்கால அரசாங்கத்திற்கு இந்நாட்டை கட்டியெழுப்ப முடியாதென்பது நிதர்சனமான உண்மை.
கண்டியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப மிகப் பெரிய தியாகங்களை அரசியல்வாதிகளே செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.





