
தென்மேல் வங்காள விரிகுடாவை அண்மித்து ஏற்பட்ட தாழமுக்கம், தமிழகம் நோக்கி நகர்வதுடன் குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுவிழந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தாழமுக்கம் நேற்றுமுன்தினம் காங்கேசன்துறையில் இருந்து 320 கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டிருந்தது.
அதன் காரணமாக வட மாகாணத்தில் இடைக்கிடையே மழையுடனான வானிலை நிலவியது. தற்போது தாழமுக்கம் தமிழகம் நோக்கி நகர்ந்துள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது





