இந்திய துணைத்தூதரை யாழ். மாவட்ட மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்!

<!–

இந்திய துணைத்தூதரை யாழ். மாவட்ட மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்! – Athavan News

யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதரை யாழ் மாவட்ட மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த சந்திப்பில் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா, உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் மற்றும் காரைநகர் அம்பாள் கடற்றொவிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் கந்தசாமி ராஜசந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply