
பளை – முகமாலைப் பகுதியில் தனியார் பேருந்து ஒன்றின் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
ஏ9 வீதியில் யாழ். நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றின் பின்னால் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் பளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.





