
விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் அமைச்சுப்பதவி பறிக்கப்பட்டதன் பின்னர் அமைச்சரவைக் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் நடைபெற்ற குறித்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்துகொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
ஆயினும் என்ன காரணத்திற்காக அரச தலைவர் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது தொடர்பிலான விடயங்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





