இலங்கையின் தற்போதைய அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்பில் விசேட அறிவித்தல் ஒன்றை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. பெப்ரவரி மாதத்தில் இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2.31 பில்லியன் டொலர்களாக இருந்ததாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இதன்படி, இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 2,025 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.இலங்கையின் தங்க கையிருப்பு 98 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






