
கொழும்பு, மார்ச் 12
மீனவர்களின் வாழ்வாதாரம், எரிபொருளில் தங்கியுள்ள காரணத்தினால் எரிபொருள் விலை அதிகரிப்பினால், மீனவர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக, அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், எரிபொருள் விலை அதிகரிப்பானது, நாட்டில் உள்ள மீனவர்களின் தொழிலை இல்லாது செய்வதற்கு சமமான செயலாகும் என அந்த சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.




