ரயிலுடன் மோதிய முச்சக்கரவண்டி; சாரதி உயிரிழப்பு!

பளை – இத்தாவில் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று ரயிலுடன் மோதுண்டதில் சாரதி பலிகியுள்ளார்.

இந்த சம்பவம் இன்று(13) பிற்பகல் 4.45 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாண நோக்கி பயணித்த யாழ் தேவி ரயிலுடன் கடமையை கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டி மோதுண்டுள்ளது.

சம்பவத்தில் பளை – வண்ணாங்கேணி வடக்கு பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய வயோதிபரே  உயிரிழந்துள்ளார். 

சடலம் கொடிகாமம் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவ தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *