
நாடு முழுவதிலுமுள்ள ரயில்நிலையங்களில் உணவு விடுதிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்வேயில் டிக்கெட் வருவாயை தாண்டி மற்ற வழிகளில் வருமானம் பெற்றுக்கொள்ள ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் உணவு விடுதிகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக ஏராளமான நிலையங்களில் உணவு விடுதிகள் செயல்படவில்லை. அதிக உரிமக் கட்டணம் நிர்ணயித்ததால் யாரும் உரிமம் கோரவில்லை.அதேபோல் ரயில்வேக்கு சொந்தமான இடங்களும் பயன் இல்லாமல் கிடக்கின்றன. இதனால் ரயில்வேக்கு வருமானம் பெருமளவில் குறைந்து விட்டது. இதையடுத்து, ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனத்திடம் இருந்து உணவு விடுதி நடத்தும் பொறுப்பு பறிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்ரயில்வே வாரியமே 100 உணவு விடுதிகளை திறக்க முடிவு செய்து உள்ளது. அதிகாரிகள் தங்கள் நிர்வாகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் ஓராண்டுக்கும் மேலாக பூட்டிக் கிடக்கும் உணவு விடுதிகளை ஆய்வு செய்து மீண்டும் திறக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




