
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷன தெனிபிட்டிய, இலங்கைக்கு மேலதிகமாக நியூசிலாந்தும் எரிபொருள் நெருக்கடியை அனுபவித்து வருவதாக தெரிவித்தார்.
இன்று திங்கட்கிழமை (14) ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாங்கள் டொலர் நெருக்கடியை எதிர்கொள்கிறோம். இது இலங்கையில் மட்டுமல்ல, நியூசிலாந்திலும் காணப்படுகிறது.
நியூசிலாந்து எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வரிசையில் நிற்கும் நபர்களின் படங்கள் எனக்கு கிடைத்துள்ளன.
நாங்கள் பொறுமையாக இருக்க வேண்டும், ஏனெனில் இந்த நேரத்தில் ரஷ்யாவும் உக்ரைனும் போரில் ஈடுபட்டுள்ளன.
நாட்டின் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் அனுபவிப்பதில்லை என்ற கூற்றை நிராகரித்தார்.
நாங்களும் இந்த பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். பெரும்பாலான எம்.பி.க்கள், அமைச்சர்கள் எங்களுக்கு போன் செய்து டீசல் கேட்கின்றனர்.
எனவே, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு போன் செய்து, இந்த குறிப்பிட்ட எம்.பி. வருவார் என்றும், வாகனத்திற்கு எரிபொருளை விடுவிக்கவும் கூறுகிறோம், என எரிசக்தி அமைச்சர் என்ற வகையில், அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் மக்களுக்காக என்ன விலைக்கும் எரிபொருளை கொள்வனவு செய்கிறது எனத் தெரிவித்த அவர், பிலியந்தலையில் இருந்து கொழும்பு வரையிலான எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் ஒரு வரிசையைக் கூட தாம் காணவில்லை எனவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், திங்கட்கிழமை (14) நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான கலால் வரி மற்றும் வீதி பயனீட்டாளர் கட்டணங்களை தலா 25c வீதம் அரசாங்கம் குறைத்துள்ளதன் மூலம் கிவி வாகன ஓட்டிகளுக்கு, அதிகரித்து வரும் பெற்றோல் விலையில் இருந்து ஓரளவு நிவாரணம் கிடைக்கும்.
அனைத்து பொது போக்குவரத்து கட்டணங்களும் ஏப்ரல் 1 முதல் மூன்று மாதங்களுக்கு பாதியாக குறைக்கப்படும்.
குறைக்கப்பட்ட பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளால் சில குடும்பங்கள் எதிர்கொள்ளும் தாக்கத்தை குறைக்க உதவும் என்று கூறினார்.