வடக்கு கிழக்கில் தமிழக முதலீடுகளுக்காக, தமிழக நிதி அமைச்சருடன்,சுமந்திரன் எம். பி பேச்சு!
தமிழகத்தில் உள்ள நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில் அதிபர்களை இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் புலம் பெயர் தமிழர்களுடன் இணைந்து கூடுதல் முதலீடுகளை செய்யும் திட்டத்தை வகுக்குமாறு,த. தே. கூ எம். பி எம். ஏ. சுமந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்துக்கு விஜயம் செய்துள்ள சுமந்திரன் எம். பி தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுடன் நேற்றையதினம் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.