கிளிநொச்சியில் புத்தரிசி வழங்கும் நிகழ்வு!

ஏப்ரல் 09 ஆம் திகதி அனுராதபுரம் ஜயசிறி மகா போதியில் நடைபெறவுள்ள தேசிய புத்தரி விழாவுக்கான புத்தரிசி வழங்கும்  நிகழ்வு இராமநாதபுரம் கமநல சேவை நிலையத்தில் கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர்  செ.சுதர்ஸ்மன் தலைமையில் நடைபெற்றது. 

நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் பா.தேவரதன் கலந்து கொண்டார்.சிறப்பு விருந்தினராக  மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர்  செ.கவிதா,  கமக்கார அமைப்புக்கள் சார்ந்தோர்,திணைக்கள உத்தியோகத்தர்கள் ,விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply