க.பொ.த உயர்தர பெறுபேறுகள் வெளியாகிய நிலையில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தினை சேர்ந்த தெய்வேந்திரன் திருக்குமரன் அகில இலங்கை ரீதியில் முதலாமிடம் பெற்றுள்ளார்.
குறித்த மாணவனை மற்றும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று சாதித்த மாணவர்களை பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் அதிபருமான சிறிதரன் நேரில் சென்று பாராட்டியுள்ளார்.




