காற்றுடன் கூடிய இடி மின்னலுடன் கன மழை காரணமாக இன்று (03) தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவின் சிராஜ் நகரில் வீடொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததால் சேதம் ஏற்பட்டுள்ளது.
மிக நீண்ட நாட்களின் பின் தற்போது வரை பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை காரணமாக மக்களின் நடமாட்டம் வெளியில் குறைவாக காணப்படுகிறது. தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கி காணப்படுகிறது.





