
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வௌ;வேறு பகுதிகளில் இன்றையதினம் மூவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் 80 மில்லிக்கிராம் ஹெரோயினை உடைமையில் வைத்திருந்த மேற்கு வீதி, ஊர்காவற்துறையைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேகநபரும், 50 மில்லிகிராம் ஹெரோயினை உடமையில் வைத்திருந்த நாரந்தனை தெற்கு, ஊர்காவற்துறையைச் சேர்ந்த 20 வயதுடைய சந்தேகநபரும், 550 மில்லிகிராம் ஹெரோயினை உடமையில் வைத்திருந்த 3ம் கட்டை – ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணத்தை சேர்ந்த 28 வயதுடைய சந்தேகநபரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து இக் கைது நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
குறித்த மூவரையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளையதினம் ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.