இனிமேலும் காத்திருக்க கூடாது, பாடசாலைகளை தொடங்குங்கள் – நீலிகா மளவிகே

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு இனிமேலும் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே தெரிவித்துள்ளார்.

பல மேற்கத்திய நாடுகளில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த ஆண்டு மே மாதத்திற்குள், இலங்கை உட்பட 23 நாடுகள் மட்டுமே பாடசாலை மூடியுள்ளதாகவும் பேராசிரியர் நீலிகா மளவிகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை யுனிசெஃப் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளரும் இதனை தெரிவித்துள்ளதாகவும் பேராசிரியர் நீலிகா மளவிகே குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *