சிறுபோக செய்கையில் வரலாறு காணாத சாதனை- கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக செய்கையில் இம்முறை வரலாறு காணாத சாதனை நிகழ்ந்துள்ளதாக மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் எந்திரி த. இராஜகோபு தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் நான்கு பாரிய குளங்களும் ஐந்து நடுத்தர குளங்களும் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் 2019 ஆண்டுக்கு முன்னர் 40% ற்கு குறைவாக காணப்பட்ட மாவட்டத்தின் சிறுபோக அளவானது இரணைமடு குளத்தின் புனரமைப்பின் பின்னர் 2019 இல் 68%ஆகவும் 2020 இல் 68.2% ஆகவும் இவ்வருடம் 2021 இல் 78.6% ஆக அதிகரித்துள்ளது.

இவ் அதிகரிப்பானது கிளிநொச்சி மாவட்ட வரலாற்றில் இதுவரை காணப்படாத உச்ச அடைவு மட்டமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மேலும் இம் முறை இரணைமடு குளத்தின் கீழான சிறுபோக பயிற்செய்கை 82% ஆக பயிற்செய்கை குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் பொது பங்குகள் பங்கணைத்தலில் ஏற்பட்ட அதிகரிப்பு மற்றும் அத்துமீறல்கள் என்பவற்றை கணக்கிடும் போது இரணைமடு குளத்தின் கீழான ஏறக்குறைய 100% பயிற்செய்கை இடம்பெற்றுள்ளதை அறிய முடிவதாகவும் இவ் அடைவு மட்டமானது விவசாயிகளின் பங்களிப்புடன் மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் சிறப்பான நீர் முகாமைத்துவத்தின் மூலம் அடையப்பட்டுள்ளதாக மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *