ஊரக உள்ளாட்சி தேர்தல்: அணைத்துக் கட்சி கூட்டம் இன்று!

ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) அணைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அனைத்துகட்சி கூட்டம் நடைபெறுகிறது. இதன்போது உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *