ஹிஷாலினி வழக்கில் ரிஷாட் பதியுதீன் நீதிமன்றத்தில் முன்னிலை

தமது வீட்டில் பணியாற்றிவந்த சிறுமி ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தமை தொடர்பான வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (06) ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.

அவரது வீட்டில் தீ காயத்திற்கு உள்ளாகி மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காக அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

சிறுமி உயிரிழந்தமை தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மாமனார், மைத்துனர் மற்றும் சிறுமியை பணிக்கமர்த்திய தரகர் ஆகிய நால்வரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மற்றுமொரு வழக்கில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இந்த வழக்கில் ஐந்தாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *