கொரோனா தொற்றுக்குள்ளான சுயாதீன ஊடகவியலாளரின் பூதவுடல் தகனம்!

கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சுயாதீன ஊடகவியலாளரின் பூதவுடல் இன்று(06) மின் தகனம் செய்யப்பட்டது.

கொடிகாமத்தை சேர்ந்த ஞானப்பிரகாசம் பிரகாஸ் (வயது 26). கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் கடந்த 02 ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.

சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக அவரது பூதவுடல் கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகனம் செய்யப்பட்டது. அத்துடன் அவரது அஸ்தி அல்லாரை புதிய செபமாலை அன்னை தேவாலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சுயாதீன ஊடகவியலாளரான, பிரகாஸ் தனது ஏழாவது வயதில் தசைத்திறன் குறைபாடு (Muscular Dystrophy) நோயினால் பாதிக்கப்படதால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அந்நிலையிலும் அவற்றை எல்லாம் தாண்டி அவர் ஊடக துறையில் தனக்கென்று ஒரு இடத்தினை தக்க வைத்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *