ஹிசாலினி வழக்கில் ரிஷாட் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், அவரின் மனைவி மற்றும் அவரின் மாமனார் ஆகியோரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டுள்ளது.

பதியுதீனின் வீட்டில் பணி புரிந்து வந்த பெண் ஒருவர் தீகாயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான வழக்கிற்காக அவர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த சம்பவத்தின் 5 ஆவது சந்தேகநபராக ரிஷாட் பதியுதீன் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *