ஈழம் என்றால் என்ன? சச்சிதானந்தவிடம் பொலிஸ் தீவிர விசாரணை

ஈழத்தமிழர் அரசியல் நடவடிக்கைகளின் போது, கடந்த 1983 ஆண்டு தொடக்கம் 2008 ஆம் ஆண்டு வரையில் தென்மராட்சி தெற்கு பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, அண்மையில் மறவன்புலவு பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் வைக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது வலிந்து காணாமலாக்கப்பட்டோர் நினைவாக நினைவுத்தூபி அமைத்தமை தொடர்பாக தன்னிடம் பொலிஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மறவன்புலவு பகுதியில் காணாமலாக்கப்பட்டோர் நினைவாக மறவன்புலவு சு. சச்சிதானந்தனால் உருவாக்கப்பட்ட கல்வெட்டுக்களுடன் நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.

இதன் காரணமாக, பொலிஸ் உயர் அதிகாரிகள் தன்னிடம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தியதாக மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

ஈழம் என்றால் என்ன? என்று அவர்கள் தன்னிடம் விசாரணை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *