வீரமாநகரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் கொரோனாவால் பலி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர், குழந்தையை பிரசவித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

வீரமாநகர் – தோப்பூர் என்னும் முகவரியில் வசித்து வந்த சந்திரன் ராதா எனும் 32 வயதுடைய கர்ப்பிணி பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது,

குறித்த கர்ப்பிணி பெண் கொரோனாத் தொற்றுக்குள்ளாகிய நிலையில் வெளியில் சொல்லப் பயத்தில் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார்.

நோயின் தாக்கம் அதிகரித்து சுயநினைவற்ற நிலையில் நேற்று முன்தினம் மூதூர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் கந்தளாய் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

நேற்று திங்கட்கிழமை (06) அதிகாலையில் சத்திரசிகிச்சையின் மூலமாக பிரசவம் நடைபெற்ற போதிலும் தாய் இறந்து விட்டார்.

எனினும், குழந்தை நலமாக இருக்கின்றது.குறித்த தாய்க்கு ஏற்கனவே நான்கு பிள்ளைகள் இருக்கின்றனர்.கொரோணாத் தொற்றுத் தொடர்பான விளக்கமின்மை மற்றும் உரிய நேரத்தில் வைத்திய சாலையில் அனுமதிக்கத் தவறியமை போன்ற காரணிகளினால் மரணம் சம்பவித்திருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *