நாட்டில் இதுவரையில் 94 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றனர் – இராணுவத்தளபதி

<!–

நாட்டில் இதுவரையில் 94 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றனர் – இராணுவத்தளபதி – Athavan News

நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 94 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதுவரை 27.2 மில்லியன் தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைத்துள்ளதாகவும் அவற்றில் 94 இலட்சத்து 14,852 பேருக்கு இரண்டு தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போது 20 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *