ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இன்று (13) ஆரம்பமாகின்றது.

இலங்கை தொடர்பான மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை முதலாவது தினத்திலேயே முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான தீர்மானமானது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46வது கூட்டத்தொடரின்போது நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்த தீர்மானத்திற்கு அமைவாக இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த வாய்மூல அறிக்கையினை மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பட்ச்லெட் இன்றைய தினம் முன்வைக்கவுள்ளார்.

அது தொடர்பில் உறுப்பு நாடுகளின் விவாதமானது நாளைய தினம் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், இன்று (13) ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48வது கூட்டத்தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *