பொலிஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையில் பணியாற்றிய அவர், புத்தளம் – அநுராதபுரம் வீதியில் உள்ள விசேட அதிரடிப்படை முகாமில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மினுவங்கொட பகுதியை சேர்ந்த 36 வயதுடைய குறித்த நபர் தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. புத்தளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *