
யாழ்.வல்வெட்டித்துறை நோக்கி பயணித்த மண்ணெண்ணெய் பவுசர் தொண்டமனாறு பகுதியில் பள்ளத்திற்குள் சிக்கியுள்ளது.
தொண்டமனாறு பகுதி ஊடாக வல்வெட்டித்துறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பவுசர் பயணித்த நிலையில் சீரற்ற வீதியின் பள்ளத்திற்குள் சிக்கியுள்ளது.
இதனை தொடர்ந்து தடம் புரண்டது. இதனையடுத்து பவுடசரில் இருந்த மண்ணெண்ணைய் பாதுகாப்பாக பிறிதொரு பவுசரில் மாற்றிக் கொண்டு செல்லப்பட்டது.




