இலங்கை நிலவரங்கள் தொடர்பில் ஐ.நா வதிவிடப் பிரதிநிதி கவலை!

இலங்கையில் வன்முறைகள் வெடித்திருப்பதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் கரிசனை கொண்டிருப்பதாக ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையின் நிலவரங்களை தொடர்ந்து அவதானித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அவர் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நேற்றிரவு மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற மக்கள் ஆர்ப்பாட்டம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply