
கொழும்பு, ஏப் 1
மொரட்டுவை மேஜர் சமன்லால் பெர்னாண்டோவின் இல்லத்திற்கு அருகில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேஜரின் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக இவ்வாறு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மொரட்டுவ குருச சந்தி பகுதியில் இருந்து காலி வீதியை மறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்னர் வில்லோராவத்தை பகுதியிலுள்ள மொரட்டுவ மேயரின் இல்லத்திற்கு பேரணியாக சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

