விமான நிலைய சேவைகள் இடைநிறுத்தம்

கொழும்பு, ஏப் 3

கட்டுநாயக்க மற்றும் பஹ்ரைன் ஆகியவற்றுக்கிடையில் சேவையில் ஈடுபடும் இரண்டு விமான சேவைகளை இடைநிறுத்த ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தீர்மானித்துள்ளது.

சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, யூஎல் 201 மற்றும் யூஎல் 202 எனும் இரண்டு விமான சேவைகளை எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply