கொரோனாவால் முதியவர்கள் மரணம்-தனிமைப்படுத்தப்பட்ட இல்லம்

வவுனியா பம்பைமடுப்பகுதியில் அமைந்துள்ள காப்பகம் ஒன்றில் வசித்து வந்த முதியவர் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணமடைந்துள்ளமையால் குறித்த இல்லம் தனிமைப்படுத்தப்பட்டது.

குறித்த முதியவர்கள் சுகவீனம் காரணமாக நேற்றையதினம் மரணமடைந்திருந்தார். அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து குறித்த காப்பகம் தனிமைப்படுத்தப்பட்டதுடன், அங்கு தங்கி வைக்கப்பட்டுள்ளோருக்கு அன்ரியன் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *