சௌதி செல்ல புதிய பயண விதிகள்- கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

சௌதி அரேபியா நாட்டுக்குச் செல்லவதற்கு புதிய பயண விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான சில பயண விதிகளையும் நிபந்தனைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அந்நாட்டின் விமான போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சௌதி ஊடக முகமை (எஸ்பிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் அல்லது உலக சுகாதார அமைப்பு அல்லது சௌதி அரேபிய அரசால் அங்கீகரிக்கப்படாத தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பயணத்துக்கு 72 மணி நேரத்துக்குள்ளாக மேற்கொண்ட கொரோனா பரிசோதனை முடிவில் எதிர்மறை என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

சௌதிக்கு வந்தவர்கள் கட்டாயமாக ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். ஐந்தாவது நாளில் அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்படும்.

முடிவு எதிர்மறை என வந்தால் மட்டுமே அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர். அதுவரை அவர்கள் சுய தனிமையிலேயே இருக்க வேண்டியது கட்டாயம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சௌதி அரேபியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கான புதிய பயண விதிகள் செப்டம்பர் 23ஆம் திகதி அமுலுக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *