கொடிகாமத்தில் இடம்பெற்ற விபத்தில் 24 வயது இளைஞன் உயிரிழப்பு!

கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, இயற்றாலை பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 09.30 மணியளவில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் கொடிகாமம் இயற்றாலை பகுதியைச் சேர்ந்த ராஜன் சிந்துஜன் (வயது 24) எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், விபத்து தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *