1-8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்த அறிவிப்பு!

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான அறிக்கை இன்று (புதன்கிழமை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இது குறித்து கல்வி அமைச்சர் மகேஷ் தெரிவிக்கையில், ”மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

அதில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகளை ஆரம்பிப்பது குறித்து கருத்து கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பாடசாலைகளை திறப்பது குறித்து முதல்வரிடம் இன்று அறிக்கை தாக்கல் செய்யவுள்ளோம். முதல்வர் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவினை அறிவிப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்காக பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *