கங்கனாவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

நடிகை கங்கனா ரணாவத் அவதூறு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர் கண்டிப்பாக அடுத்த முறை மன்றில் முன்னிலையாக வேண்டும் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நடிகை கங்கனா தொலைக்காட்சி நிகழ்வொன்றில் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் மீது அவதூறாக பேசியதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுவதில் இருந்து விலக்களிக்குமாறு கங்கனா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஜாவேத் அக்தர் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், வழக்கை இழுத்தடிக்கவே கங்கனா ரணாவத் முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதனையடுத்து அடுத்தமுறை வழக்கு விசாரணைக்கு கங்கனா நேரில் முன்னிலையாக வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள் தவறினால் பிடி வாரன்ட் பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply