இலங்கை இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலை வாய்ப்பாம்!

இலங்கையில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு ஜப்பானில் வேலை வாய்ப்புகளை வழங்க ஜப்பான் அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள பல்லாயிரம் கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு ஜப்பானில் உள்ள விவசாய பண்ணைகளில் வேலை வாய்ப்புகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று ஜப்பானுக்கான இலங்கை தூதர் குணசேகர தெரிவித்துள்ளார்

இன்று புதன்கிழமை காலை விவசாய அமைச்சகத்துடன் ஜூம் தொழில்நுட்பத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் 10,000 இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதில் முனைப்புடன் செயற்பட்டதற்கு ஜப்பானுக்கான இலங்கை தூதருக்கு விவசாய அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த வேலை வாய்ப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர் யுவதிகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து தேவையான மொழிப் பயிற்சி மற்றும் பிற பயிற்சித் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என மகிந்தானதே அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

Leave a Reply