முல்லைத்தீவில் ஒருவர் திடீர் மரணம்!

முல்லைத்தீவு மாவட்டம் நாயாறுப் பகுதியில் பண்ணை உரிமையாளர் ஒருவர் திடீர் மரணம் அடைந்ததாக தெரியவருகின்றது.

முல்லைத்தீவைச் சேர்ந்த 65 வயதுடைய சுந்தரம் என்பவரே நேற்று மாலை தனது பண்ணைப் பகுதியில் உடல் நலப்பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இதனிடையே, அவரின் சடலம் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், குறித்த நபர் நேற்று முன்தினம் கொரோனா 02 ஆவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர் என்றும் தெரியவருகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *