காலிமுகத்திடலில் களைகட்டிய ஈத் பண்டிகை!

அரசாங்கத்திற்கு எதிராக தொடர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ள கொழும்பு காலி முகத்திடலில் இன்று விசேட கொண்டாட்டங்களுடன் ஈத் பண்டிகை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பௌத்த துறவிகள், கிறிஸ்தவ பாதிரியார்கள் என பல மதத் தலைவர்கள் பண்டிகைகளில் பங்கேற்று, ஈத் உணவை விருந்தளித்தனர்.

காலி முகத்திடலில் உள்ள பழைய பாராளுமன்றத்திற்கு எதிராக பிரியாணியுடன் சவான்களை பகிர்ந்து கொண்ட பொதுமக்களும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை காணமுடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *