
மும்பை,மே 04
15வது ஐபிஎல் சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புதன்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு- சென்னை அணிகள் மோதின.
டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக கேப்டன் டு பிளசிஸ் ,விராட் கோலி களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இருவரும் தொடக்க விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தனர். அதன்பிறகு பிளஸ்சிஸ் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மேக்ஸ்வெல் 3 ரன்களில் (ரன் அவுட் ) தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த ஓவரிலே விராட் கோலி 30 ரன்களில் ஆட்டமிழந்தார் .
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மகிபால் லோம்ரோர் 42 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டினார் இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு173 ரன்கள் எடுத்தது .இதனை தொடர்ந்து 174 ரன்கள் இலக்குடன் சென்னை அணி விளையாடியது .
தொடக்க வீரர்களாக டேவோன் கான்வே ,ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர்.சென்னை அணி சிறப்பான தொடக்கம் அமைத்தனர் .தொடக்க விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் 28 ரன்களில் ஆட்டமிழந்தார் .பின்னர் வந்த ராபின் உத்தப்பா 1 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார் .அதன்பின்னர் வந்த ராயுடு 10 ரன்களிலும், டோனி 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
சென்னை அணியை 160 ரன்களுக்கு மடக்கி 13 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.