பாராளுமன்ற ஆர்ப்பாட்டம்; விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு காலிமுகத்திடலில் வரவேற்பு.

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இன்றையதினம் பாராளுமன்ற அமர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளை பாராளுமன்ற வளாகத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது பாராளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதங்களை மீறியதாக 13 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று மாலை கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதேவேளை கைது செய்யப்பட்டவர்களுக்காக முன்னிலையாவதற்காக கடுவலை நீதவான் நீதிமன்றில் பெருந்திரளான சட்டத்தரணிகள் ஒன்று திரண்டிருந்தனர்.

இந்நிலையில் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இதேவேளை விடுதலை செய்யப்பட்ட 13பேரும் இன்றிரவு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவிற்கு வாகன ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர்.

இந்நிலையில் அவர்களுக்கு காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக் காரர்கள் வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *