இலங்கை நாட்டில் அண்மையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாகினர். அவர்களது சிரமங்களை போக்குவதற்காக தமிழ் நாடு அரசு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏகமானதாக இலங்கைவாழ் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பிரேரனை ஒன்றை முன்மொழிவு செய்து அதை நிறைவேற்றியும்கொண்டார்.
இதன் மூலம் ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான பொருட்கள் மத்திய அரசின் வெளியுறவு துறை அமைச்சர் அவர்களின் மூலம் அனுமதி பெறப்பட்டு இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தினூடாக வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தக்க தருணத்தில் தங்கள் உளபூர்வமான உதவியினை முழு இலங்கைவாழ் மக்களுக்கும் ஓரளவேனும் இந்த நிதி உதவி மூலம் பொருளாதார சிக்கல் தீர வேண்டும் என ஒரு அர்பணிப்பான உணர்வுடன் எடுத்த அவர்களுடைய இந்த சேவை காலத்தால் நிச்சயம் போற்றப்படும், மதிக்கப்படும் இந்த வகையில் இலங்கைக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் இந்தியாவின் உதவிக் கரம் இலங்கைவாழ் மக்களால் மறக்கமுடியாதவை. மேலும் இலங்கைக்கான அத்தியவசிய தேவைக்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்க வேண்டும் என சர்வதேச இந்துமதபீட செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபு சர்மா கேட்டுகொண்டதுடன் நன்றிகளுடன் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை கொரோனா பேரிடர் காலத்தில் கொரோனா தடுப்பூசியை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ கோரிய வேளை இங்கைக்கு இலவசமாக முதன் முதலாக தந்து உதவியது இந்திய நாடு என்பதையும் இத்தருணத்தில் அவர் ஞாபகப்படுத்தியிருந்தார்.

