இலங்கைக்கு உதவ முன் சஜித்திடம் அனுமதி கோரிய இந்தியா!

இலங்கைக்கு உதவுவதற்கு முன் இந்திய அரசாங்கம் எனது பரிந்துரையை கேட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “இலங்கைக்கு உதவ வேண்டுமா வேண்டாமா என்று இந்திய அரசு என்னிடம் கேட்டது. அது நல்ல யோசனையா என்று கேட்டார்கள். நான் பொய் சொல்லவில்லை.

இலங்கை மக்களுக்கு என்ன உதவி செய்ய முடியுமோ அதைச் செய்ய வேண்டும் என்று அவர்களிடம் சொன்னேன். அதன் பிறகுதான் , இலங்கைக்கு உதவ இந்தியா தீர்மானித்துள்ளது” என்று நாடாளுமன்றத்தில் சஜித் தெரிவித்தார்.

“இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை ரத்து செய்ய வேண்டாம் என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை வைத்துள்ளேன். நாங்கள் பொறுப்பான கட்சியாக செயல்பட்டோம்” என்று சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.”தேசத்தை ஒழுங்கமைக்க அரசாங்கத்தின் எந்தவொரு வெளிப்படையான மற்றும் உண்மையான முயற்சியையும் நாங்கள் ஆதரிப்போம். அரசாங்கம் நன்கொடையாளர் மாநாட்டை நடத்த வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன், மேலும்ஐக்கிய மக்கள் சகத்தியில் உள்ள நாங்கள் அத்தகைய நடவடிக்கையை ஆதரிப்போம்,” என்று அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *